நண்பர் பெயரிலிக்கு ஒரு பணிவான பதில்

02-04-2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே..


ஆறிப் போய்விட்டது என்று நினைத்திருந்த ஒரு விஷயம், என் வீட்டுக்குள்ளே புகுந்து அப்பிராணியாக சமர்த்துக் குட்டியாகப் படுத்திருக்கும் விஷயம் எனக்கு இன்றைக்குத்தான் தெரிந்தது.

எனது முந்தைய கேள்வி-பதில் பதிவில் நான் எழுதிய ஒரு கேள்வி-பதிலில் ‘பிரெஞ்சு வீராங்கனை’யின் பதிவை தமிழ்மணம் நீக்கியது பற்றிய எனது கருத்தை தெரிவித்திருந்தேன்.
அதற்கு நண்பர் பெயரிலி தனது தளத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதனை நான் அன்றைக்கே படித்தேன். புரியவில்லை. பிரிண்ட் அவுட் எடுத்து கையில் வைத்தும் படித்துப் பார்த்தேன் அப்போதும் சிலது மட்டும் புரியவில்லை.

சரி.. அப்படியே விட்டுவிடுவோம். அதுதான் முடிந்துவிட்டதே என்றெண்ணி விட்டுவிட்டேன்.

இடையில் வலைப்பதிவர் சந்திப்பு என்று நமக்குத் தேவையான பிரச்சினைகள் இருந்தன என்பதனால் அதை கண்டு கொள்ளவில்லை.

ஆனால் பதிவர் பெயரிலி, அந்தப் பதிவை எனது பதிவோடு சங்கிலி போட்டுக் கட்டி வைத்திருப்பதை இன்று மதியம்தான் தற்செயலாகப் பார்த்தேன்.
ஒருவேளை நான்தான் படிக்காமல் இருக்கிறேனோ என்ற அர்த்தத்தில் அவர் செய்திருக்கலாம். அல்லது எனது பதிவைப் படிப்பவர்கள் அவர் தரப்புக் கருத்தையும் படிக்கட்டுமே என்பதற்காக அவர் எழுதியிருக்கலாம்.

எப்படியிருந்தாலும், இது எனது கவனத்திற்கு வராததால் நான் பதிலளிக்க ஆர்வமில்லாமல் இருந்தேன். இப்போது அவரே தொடர்பு ஏற்படுத்தி வைத்திருப்பதால் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் எனக்கு வந்துள்ளது.
மேலும்… எனக்கு இன்று வந்த ஒரு சுட்டி, நண்பர் பெயரிலியின் தற்காலிக எழுத்து நிறுத்தத்திற்கான காரணத்தை எனக்கு உணர்த்தியது. மிக்க வருத்தமடைந்தேன்.
இந்த நேரத்திலும் அவருக்கு சிரமத்தைத் தர வேண்டுமா என்ற எண்ணம் எனக்குள் இருந்தாலும், இப்போதுவிட்டால் இனி எப்போதும் அதற்கு பதிலளிக்க முடியாது என்பதனால் இப்பதிவில் பதில் அளித்துள்ளேன்.
அதற்கு முன்பாக நண்பர் பெயரிலிக்கு ஒரு விஷயம்..

தைரியமாக இருங்கள்.. அனைத்து அராஜகங்களுக்கும் ஒரு முற்றுப் புள்ளி கண்டிப்பாக உண்டு. அது நிச்சயம் நமக்கும் கிடைக்கும்.(கவனிக்கவும்.. ‘நமக்கு’ என்றுதான் சொல்லியுள்ளேன்)
ஏனெனில் எனக்கும் உங்களைப் போல அப்படியொரு இணைப்புத் தளம் உண்டு. கூகிளாண்டவரிடம் சொல்லித் தேடிப் பாருங்கள்.. கிடைக்கும்.
இனி நண்பர் பெயரிலி எனக்காக எழுதிய கட்டுரை இதோ..

“அய்யா உண்மைத்தமிழரே
உங்கள் அறிவின் எல்லையை அடிக்கடி நீங்கள் காட்டி அறியத் தருவது இது முதற் றடவை அல்ல.. ஆதலினால், விட்டுவிடலாம்.

ஆனால்,
/அங்கே, இங்கே என்று கை வைத்து கடைசியில் சிவனின் தலையிலேயே கை வைத்ததைப் போல் ‘வீராங்கனை’ பெயரிலியின் தலையில் கை வைக்கப் போய் அது இந்த நடவடிக்கையில் போய் முடிந்துவிட்டது. ‘அவர்களெல்லாம் சக பதிவர்கள்தானே.. ஒரு எச்சரிக்கையாச்சும் விடுவோமே’ என்ற எண்ணம்கூட அப்போதெல்லாம் தமிழ்மண நிர்வாகிகளுக்கு வரவில்லை. ஆனால் அவர்களின் அடிமடியில் கை வைத்தவுடன் கோபம் பொத்துக் கொண்டு வந்துவிட்டது./
இப்படியான உங்கள் கருத்துக்களையெல்லாம் தமிழ்மணத்தின் செயற்பாடாக நீங்கள் முன்வைப்பது எவ்விதத்திலே நியாயம்?
குறிப்பிட்ட பதிவுகளைப் பெயரிலி நீக்காது, வேறு யாராவது நீக்கியிருந்தாலும் இதே கருத்தைத்தான் எழுதியிருப்பீர்களா?
நீங்கள்தான் சென்னைப்பதிவர் பட்டறையிலேயே, பெயரிலி எழுதும் இழவைத் தவிர, மீதி ஈழத்தமிழர் எழுதுவதெல்லாம் புரிந்துகொள்ளமுடிகின்றது என்றவராச்சே. இப்போதும் நான் இங்கே எழுதியது புரியவில்லை என்று தப்பித்துக்கொள்ளலாம்.
அதே போல,

/ஏன் உங்களையே சம்பந்தமில்லாமல் சொந்த பெயர்களிலும், அனானியாகவும், அதர் ஆப்ஷனிலும் திட்டவில்லை? ”அது தான் பெயரிலி!” :-)))))))))/

இப்படியான கருத்துகளை ஒருவர் போகிறபோக்கிலே விதைக்கிறார்.

சூரமணி தொடக்கம் இணையத்திலே எழுதும் எல்லா ஜில்ஜில் ரமாமணிவரையான அநாமதேயத்தும் பெயரிலிதான் என்று சும்மா சொல்லிவிட்டுப்போவார். மக்கள் கையைக் கொட்டுவார்கள். தட்டுக ்கழுவி, கொடுந் தமிழீழத்து அதிகார வர்க்கத்து அராஜகப் பெயரிலியிலே பழியைப் போட்டாலே போச்சு. இதெல்லாம் நீங்கள் அனுமதித்து விட்டுப் போவீர்கள். அப்போதும் இந்தப ்பதிவு நீக்கப்படவில்லையே? 😦

அண்ணன் வவ்வால், நேற்று மேட்ரிஸ் பெயரிலி பற்றி உங்களைப் போலவே எழுதின கருத்துக்குப் பெயரிலி எழுதுன கருத்தினையும் இதுவரை விடவில்லை. பெயரிலியோ தமிழ்மணமோ நீக்கவில்லையே.

மாலன் தொடக்கம் மாயா வரைக்கும் எத்தனையோ பதிவர்களோடு பெயரிலி “சண்டை போட்டுக் கொண்டு”தான் இருக்கிறான்.

இதுவரை எப்பதிவுமே நீக்கப்பட்டதாகத் தெரியவில்லையே. பெயரிலி என்ற பெயரில்லாமலே தமிழ்மணத்திலே பதிவு நீக்கப்படும்போதுங்கூட, தமிழ்மணத்திலே வேறெவரையும் தாக்காமல், தட்டுக ்கழுவி ஆணீயப் பித்தளைப் பெயரிலியையே தாக்கினார்கள். அப்போதெல்லாங்கூட அவர்களின் பதிவுகள் நீக்கப்படவில்லையே.

சென்ற மார்ச் மாதம் தமிழ்மணத்திலேயிருந்து சிலர் நீங்கியபின்னர், பெயரிலியையே குறிவைத்துத் தாக்கி இரவுக் கழுகு தொடக்கம் இத்தனை சென்னை_சிங்கப்பூர்ப ்பதிவுகள் வந்தன. அப்போதுகூட அப்பதிவுகள் நீக்கப்படவில்லையே.
இத்தனைக்கும் அதே காலகட்டத்திலே சென்னை வலைப்பதிவர்கள் ஒரு நிகழ்ச்சியின்போது சந்திக்கையிலே ஒரு திராவிடப் பதிவர் என்று சொல்லிக்கொள்ளும் பதிவர், “இங்கே எங்களுக்குள்ளே இரவுக் கழுகாரும் இருக்கின்றார்” என்று சொல்லியதற்கு நேரடியான நம்பிக்கையான சாட்சியம் என்னிடமுண்டு.
ஆனால், அதைப் பற்றியெல்லாம் நான் எழுதவில்லையே. தனிப்பட்ட விதங்களிலே தமிழ்மணத்துள்ளும் வெளியேயும் அறிந்த, நேரடியாக உணர்ந்த எத்தனையோ விசயங்களையெல்லாம் பெயரிலியை உன்னதப்படுத்த இழுப்பதானால், இழுக்கலாம்.

ஆனால், தனிப்பட்ட வகையிலேயும் தொழில்முறையிலே தமிழ்மணத்துள்ளும் நிகழ்ந்தவற்றையெல்லாம் இங்கே எந்நிலையும் சம்பந்தப்பட்டவர்களின் அனுமதியின்றி விரும்பவில்லை.
இன்றைக்கு அராஜகம், அதிகாரம் என்றெல்லாம் கையைக் கொட்டும் சுட்டும் பேர்வழிகளெல்லாம், இப்படியாகப் பெயரிலி அநியாயத்துக்கு தமிழ்மணத்திலே இருக்கும் ஒரே காரணத்துக்காக அடிவாங்கியபோது எங்கேயிருந்தார்கள்?
உங்களையோ மற்ற திராவிடக் கொள்கைகளைக் கொல்லவென்றே அவதாரம் எடுத்தவர்களையோ நான் பெரிதும் கொள்கையடிப்படையிலே மதிப்பதில்லை.

அதனால், கவலையில்லை. தோழர் ஸ்டாலினுக்கும் ராஜாவனஜுக்கும் கொஞ்சமாவது நியாயமிருக்க வேண்டாமா?

இத்தனை திட்டித் தட்டித் தள்ளுகின்றவர்கள், எப்போதாவது ஜடாயு போன்றோர், போலி சல்மா விடயத்திலே ஐய்பி கொடுத்தார்கள் என்று சொல்லிக்கொண்டு, பெயரிலியைப் போட்டு இலங்கைத ்தமிழன் என்றதை நேரடியாகவே சுட்டி அடித்துக் கொண்டிரூந்தபோது, அடியை வாங்கு என்று buffer zone-இலேயே விட்டுவிட்டுப் போய் அவன் பின்னாலேயே ஒளிந்து கொண்டதும் நடந்தது.

சரி, அதைத்தான் விடுங்கள். இப்படி எதுக்கெடுத்தாலும், தமிழ்மணம், பூங்கா என்றால், பெயரில்லாமலே பெயரிலிதான் என்று திட்டித ்தள்ளுகின்றவர்கள், எப்போதாவது, தமிழ்மணம், பூங்காவிலே வந்த பெயரிலி செய்த நல்ல விசயத்துக்குப் பெயரிலியைப் பாராட்டியதுண்டா?
இல்லையே, அதை மட்டும் கவனமாகக் கொண்டுபோய், ஒன்றுமே பேசாமல், வெளிக்கு நாமே எல்லாம் என்று காட்டிக்கொண்டவர்களுக்கு அல்லவா சொரிந்துவிட்டுப ்போனார்கள்! போகிறார்கள்!!

சரி, அண்ணன் வவ்வால் மாதிரியாக இப்பின்னூட்டத்தை நீங்களும் ஒளித்துவிடுங்கள்.

நிற்க;

பெயரிலியின் பதிவிலே தமிழ்மணப்பட்டையை எத்தனை நாட்களாகக் கண்டு கொண்டிருக்கின்றீர்கள்?

பெயரிலியின் இடுகைகளைப் பெயரிலி தூக்கித் தமிழ்மணத்திலே இப்போதெல்லாம் போடுவதில்லை.

தமிழ்மணத்திலே என்ன நடந்தாலும், பெயரிலிதான் என்று ஆகுவதாலே, பட்டையைக் கழட்டியே வைத்திருக்கிறான். யாரவது, வம்புக்குத் தூக்கிப்போடும் அநாமதேயம் போட்டால் உண்டு.
தமிழ்மணத்திலேயிரூந்து என் பதிவினை நீக்கும் நோக்கமில்லை; அதே நேரத்திலே, தமிழ்மணத்துக்கு – இப்படியான அறைகுறையான புரிதல் உள்ள உங்களைப் போன்றவர்களின் எதேச்சைத்தனமான கருத்துத் தாக்குதல் – இருக்கும்வரைக்கும் நானாக அனுப்பவும் உத்தேசமில்லை.
வாழ்க நீர் எம் man..”

நண்பர் பெயரிலியின் இந்த கேள்வியறிக்கைக்கான எனது பதில் இதோ :

//அய்யா உண்மைத்தமிழரே,உங்கள் அறிவின் எல்லையை அடிக்கடி நீங்கள் காட்டி அறியத் தருவது இது முதற் றடவை அல்ல.. ஆதலினால், விட்டுவிடலாம்.//
நண்பர் பெயரிலியாரே.. நான் எனது முந்தைய அறிவின் எல்லையைக் காட்டியது எதில், எப்போது என்பதைக் கொஞ்சம் சொன்னால், உங்களது பார்வையில் எனது அறிவின் எல்லை எது என்பதனை நானறிந்து இனிமேல் தங்களிடம் அது போன்ற எனது பலவீனமான அறிவின் எல்லையைக் காட்டாமல் ஒளித்து வைத்துக் கொள்வேன்.

//ஆனால், /அங்கே, இங்கே என்று கை வைத்து கடைசியில் சிவனின் தலையிலேயே கை வைத்ததைப் போல் ‘வீராங்கனை’ பெயரிலியின் தலையில் கை வைக்கப் போய் அது இந்த நடவடிக்கையில் போய் முடிந்துவிட்டது. ‘அவர்களெல்லாம் சக பதிவர்கள்தானே.. ஒரு எச்சரிக்கையாச்சும் விடுவோமே’ என்ற எண்ணம்கூட அப்போதெல்லாம் தமிழ்மண நிர்வாகிகளுக்கு வரவில்லை. ஆனால் அவர்களின் அடிமடியில் கை வைத்தவுடன் கோபம் பொத்துக் கொண்டு வந்துவிட்டது./இப்படியான உங்கள் கருத்துக்களையெல்லாம் தமிழ்மணத்தின் செயற்பாடாக நீங்கள் முன்வைப்பது எவ்விதத்திலே நியாயம்?//
முதலில் எனக்குத் தெளிவான ஒரு பதிலை தமிழ்மண நிர்வாகிகளிடமிருந்து வாங்கிக் கொடுங்கள்..

‘வீராங்கனை’யின் பதிவு எதற்காக தமிழ்மணத்திலிருந்து நீக்கப்பட்டது..?

லக்கிலுக்கின் இடுகை நீக்கப்பட்டதற்கு ஆதரவு தெரிவித்து அவரும் பதிவொன்றை போட்டதாலா..?

அல்லது
அவரது முந்தைய செயற்பாடுகளால் ஏற்கெனவே அவர் மீது ‘கண்’ வைத்திருந்த தமிழ்மணம் நிர்வாகிகள் அன்றைக்கு எதேச்சையாக தளத்தை நீக்கும் முடிவைச் செய்ய எத்தனித்த போது லக்கிலுக் தனது பதிவைப் போட்டுவிட்டாரா..?
இதனால் மேற்கொண்டு நடவடிக்கையை நிறுத்த விரும்பாமல் தமிழமணம் நிர்வாகம் உடனே அதைச் செயல்படுத்தியதா..?

நீங்கள் தொடர்ந்து இது பற்றி எழுதிக் கொண்டேயிருப்பதால் இது போன்ற கேள்விகள் பல திசைகளிலும் விரிந்து சென்று கொண்டேயிருக்கின்றன. வேறு வழியில்லை சிரமத்திற்கு மன்னிக்கவும்.
இந்த விஷயத்தில் என்னுடைய புரிதல் என்னவெனில், உங்களுடனான வீராங்கனையின் மோதலுக்குப் பிறகுதான், அவரை நீக்கும் முடிவை தமிழ்மணம் நிர்வாகம் எடுத்துள்ளது என்பதே.

இதில் லக்கிலுக்கை சம்பந்தப்படுத்த வேண்டாம். அவருடைய இடுகையை நீக்கும்போது தவறுதலாக தளமே நீக்கப்பபட்டு விட்டதாக தமிழ்மணம் நிர்வாகமே சொல்லிவிட்டதால் அது தேவையற்றது.
அப்படியானால் இந்த… என்னுடைய புரிதலுக்கேற்ப என்னுடைய ஆதங்கமும் மிகச் சரியானதுதானே..

ஏனெனில், “உங்களுடனான மோதலில், ‘வீராங்கனை’ உங்களை ஒருமையில் நிந்தித்தும், விளித்தும், ‘திட்டுதல்’ என்பதற்கான அர்த்தமுள்ள வார்த்தைகளை உபயோகித்தும், ‘அசிங்கம்’ என்று சொல்லி நாம் நடுவீட்டில் பேசாமல் நமக்குள்ளேயே தொண்டைக்குள் முழுங்கும் வார்த்தைகளை சரளமாக வீசியும் அதகளம் செய்ததால்… பெயரிலியான நீங்கள் தமிழ்மணம் நிர்வாகத்தில் இருக்கின்ற 12 பேரில் ஒருவர் என்கின்ற அதிகாரத்தில் உங்களுடைய நிர்வாகக் குழுவில் பிராது கொடுத்து அவரை நீக்கும்படி தூண்டியிருக்கிறீர்கள். அந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டு ‘வீராங்கனை’யின் தளம் நீக்கப்பட்டது” என்று நான் நினைத்தேன். இதனால்தான் அப்படி எழுதினேன்.

//குறிப்பிட்ட பதிவுகளைப் பெயரிலி நீக்காது, வேறு யாராவது நீக்கியிருந்தாலும் இதே கருத்தைத்தான் எழுதியிருப்பீர்களா?//
இதற்கு என்ன அர்த்தம் என்று எனக்குப் புரியவில்லை.

ஆனாலும், ‘தமிழ்மணம் நிர்வாகக் குழுவில் பெயரிலி இல்லாது இருந்து, வேறு யாராவது நீக்கியிருந்தாலும் இதே கருத்தைத்தான் எழுதியிருப்பீர்களா?’ என்பதுதான் இதற்கு அர்த்தமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

நான் நினைத்த மேலே கண்ட வாக்கியங்கள் உண்மையெனில், எனது பதில் இதுதான்..
ஆமாம்.. நிச்சயம் இதைத்தான் எழுதியிருப்பேன்.

//நீங்கள்தான் சென்னைப்பதிவர் பட்டறையிலேயே, பெயரிலி எழுதும் இழவைத் தவிர, மீதி ஈழத்தமிழர் எழுதுவதெல்லாம் புரிந்துகொள்ளமுடிகின்றது என்றவராச்சே. இப்போதும் நான் இங்கே எழுதியது புரியவில்லை என்று தப்பித்துக்கொள்ளலாம்.//
சாமி.. சத்தியமா நான் அங்கன உங்களைப் பத்தி என்ன எழுதினேன்னு எனக்குத் தெரியல.. ஞாபகமும் இல்ல..

உள்ள பூந்து தேடித் பார்த்து ஓய்ஞ்சு போயிட்டேன்..

நீங்களாச்சும் நான் என்ன எழுதினேன்னு எடுத்துப் போட்டீங்கன்னா.. அதனை என்ன வகையான வாக்கியமாக அமைத்திருந்தேன் என்பதனை உங்களுக்குப் புரிய வைப்பேன்.

//அதே போல,/ஏன் உங்களையே சம்பந்தமில்லாமல் சொந்த பெயர்களிலும், அனானியாகவும், அதர் ஆப்ஷனிலும் திட்டவில்லை? ”அது தான் பெயரிலி!” :-)))))))))/
இப்படியான கருத்துகளை ஒருவர் போகிற போக்கிலே விதைக்கிறார். சூரமணி தொடக்கம் இணையத்திலே எழுதும் எல்லா ஜில்ஜில் ரமாமணிவரையான அநாமதேயத்தும் பெயரிலிதான் என்று சும்மா சொல்லிவிட்டுப் போவார். மக்கள் கையைக் கொட்டுவார்கள். தட்டுக ்கழுவி, கொடுந் தமிழீழத்து அதிகார வர்க்கத்து அராஜகப் பெயரிலியிலே பழியைப் போட்டாலே போச்சு. இதெல்லாம் நீங்கள் அனுமதித்து விட்டுப் போவீர்கள். அப்போதும் இந்தப ்பதிவு நீக்கப்படவில்லையே? :-(//
நண்பரே, அந்த கமெண்ட்டை அப்போதே நான் நீக்கிவிட்டேன். நீங்கள் பார்க்கவில்லை போலும்.
வலையுலகில் ஏதோ உங்களை மட்டுமே அம்மையார் திட்டியிருப்பது போலவும், மற்றவர்களை எல்லாம் தொட்டிலில் போட்டு தாலாட்டியது போலல்லவா பேசுகிறீர்கள்..?
பாட்டு என்றால், எப்பேர்ப்பட்ட பாட்டுக்களையெல்லாம் நாங்கள் பாராட்டுக்களாக வாங்கியிருக்கிறோம் தெரியுமா உங்களுக்கு?

எனக்கு கிடைத்த பட்டப் பெயர் ‘காளையடிக்கப்பட்ட காளை’. இனவிருத்தி செய்யத் தகுதியில்லாத, சக்தியில்லாத காளை மாடாம் நான்..

இந்தப் பெண்தான் ஐரோப்பிய கண்டத்தில் பெரியாரின் பகுத்தறிவைப் பரப்பி கிழக்கே உதிக்கும் சூரியனை மேற்கே கொண்டு வரப் போகிறாராம்.

நான் மட்டுமல்ல.. எத்தனையோ பேர் அங்கே அறிவுரை சொல்லப் போய் புண்ணாகிப் போய் வந்திருக்கிறார்கள்.
காயம்பட்டது நீங்கள் ஒருவர் மட்டுமே அல்ல, என்பதனையும் கொஞ்சம் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

//அண்ணன் வவ்வால், நேற்று மேட்ரிஸ் பெயரிலி பற்றி உங்களைப் போலவே எழுதின கருத்துக்குப் பெயரிலி எழுதுன கருத்தினையும் இதுவரை விடவில்லை.//

இந்தக் கேள்வியை வவ்வாலிடம் தள்ளிவிடுகிறேன்.

மேலும் எனக்கும் வவ்வால்ஜிக்கும் இடையில் இப்போது terms சரியில்லை. மேற்கொண்டு அவரை நான் இங்கே விவாதிக்க முடியாமைக்கு மன்னிக்கவும்.
//பெயரிலியோ தமிழ்மணமோ நீக்கவில்லையே. மாலன் தொடக்கம் மாயா வரைக்கும் எத்தனையோ பதிவர்களோடு பெயரிலி “சண்டை போட்டுக்கொண்டு”தான் இருக்கிறான். இதுவரை எப்பதிவுமே நீக்கப்பட்டதாகத் தெரியவில்லையே.//

நானும் ஒத்துக் கொள்கிறேன். ஆனாலும் புரியாத ஒன்று. ஏன் சண்டை போட வேண்டும்? அமைதியாகவே உரையாடலாமே..?

//பெயரிலி என்ற பெயரில்லாமலே தமிழ்மணத்திலே பதிவு நீக்கப்படும்போதுங்கூட, தமிழ்மணத்திலே வேறெவரையும் தாக்காமல், தட்டுக ்கழுவி ஆணீயப் பித்தளைப் பெயரிலியையே தாக்கினார்கள். அப்போதெல்லாங்கூட அவர்களின் பதிவுகள் நீக்கப்படவில்லையே.//
உண்மைதான். ஆனால் இதிலும் ஒரு விஷயம்.. தமிழ்மணம் நிர்வாகிகளில் உங்களை மட்டுமே தாக்கினார்கள் என்ற கூற்றை நான் ஒத்துக் கொள்ள மாட்டேன்.

12 பேரையுமே தாக்கி எழுதப்பட்ட ‘மகாபாரதக் கதை’களையெல்லாம் நான் படித்திருக்கிறேன். அதை யார் எழுதியது என்பது உங்களுக்கே தெரியும். சொல்ல வேண்டியதில்லை.

ஆனால் இப்போது நீங்கள் மட்டுமே உரையாடலுக்கு, அனைவருடனும் முன் வந்து கொண்டிருப்பதால் கூடுதல் கவனம் பெற்றிருக்கிறீர்கள். அவ்வளவுதான்..
அதோடு இந்தத் ‘தட்டுக் கழுவி’, ‘ஆணியப் பித்தளை’ போன்ற பட்டங்களை யார் கொடுத்தார்கள் என்று எனக்குத் தெரியாது.

ஆனாலும், அவர்களையெல்லாம் முருகனிடம் விட்டுவிடுங்கள். அவன் பார்த்துக் கொள்வான்.
//சென்ற மார்ச் மாதம் தமிழ்மணத்திலேயிருந்து சிலர் நீங்கிய பின்னர், பெயரிலியையே குறிவைத்துத் தாக்கி இரவுக் கழுகு தொடக்கம் இத்தனை சென்னை_சிங்கப்பூர் ்பதிவுகள் வந்தன. அப்போதுகூட அப்பதிவுகள் நீக்கப்படவில்லையே.?//
யார் இடையில் விலகிக் கொண்டார்கள் என்பது எனக்குத் தெரியாது.

ஒரு விஷயம் நண்பரே..

எல்லாப் பதிவர்களும் அனைத்துப் பதிவுகளையும் படித்துக் கொண்டிருப்பது முடியாது. இணையத்தில் அது சாத்தியமில்லை. உங்களுக்கே தெரியும்..

எங்களது கண்களுக்கு பட்ட அனைத்தையும் முடிந்தவரை படித்துதான் வருகிறோம். ஆனாலும் மீறிப் போனது இருக்கலாம்.. அல்லவா..? இதோ உங்களுடைய இந்தப் பதிவைப் போல..
//இத்தனைக்கும் அதே காலகட்டத்திலே சென்னை வலைப்பதிவர்கள் ஒரு நிகழ்ச்சியின்போது சந்திக்கையிலே ஒரு திராவிடப் பதிவர் என்று சொல்லிக் கொள்ளும் பதிவர், “இங்கே எங்களுக்குள்ளே இரவுக் கழுகாரும் இருக்கின்றார்” என்று சொல்லியதற்கு நேரடியான நம்பிக்கையான சாட்சியம் என்னிடமுண்டு. ஆனால், அதைப் பற்றியெல்லாம் நான் எழுதவில்லையே.//

இந்த ‘இரவுக்கழுகு’ யார் என்பது இங்கே, இந்த விஷயத்திற்கு எவ்வளவு முக்கியம் என்று எனக்குத் தெரியவில்லை.

இந்தப் பெயரை நான் கேள்விப்பட்டதோடு சரி.. மேற்கொண்டு எதுவும் தெரியாது.. இதற்கும் ‘வீராங்கனை’யின் தள நீக்கத்திற்கும், எந்தவிதத்தில் சம்பந்தம் என்று எனக்குப் புரியவில்லை.

ஒரு வேளை என் பார்வைக்கு வராத தளங்களில் ஏற்பட்ட மோதல்களால் இது நடந்திருக்குமானால் நான் என்ன செய்ய முடியும்?
‘வீராங்கனை’யின் பதிவுகளை நீக்க வேண்டும் என்று சொல்லி நான் ஒரு பதிவை எழுதியிருந்தேன். அதன் அடிப்படையில் மட்டுமே இப்போது உங்களிடம் உரையாடுகிறேன் என்பதைக் கவனித்தில் கொள்ளவும்.
//தனிப்பட்ட விதங்களிலே தமிழ்மணத்துள்ளும் வெளியேயும் அறிந்த, நேரடியாக உணர்ந்த எத்தனையோ விசயங்களையெல்லாம் பெயரிலியை உன்னதப்படுத்த இழுப்பதானால், இழுக்கலாம். ஆனால், தனிப்பட்ட வகையிலேயும் தொழில்முறையிலே தமிழ்மணத்துள்ளும் நிகழ்ந்தவற்றையெல்லாம் இங்கே எந்நிலையும் சம்பந்தப்பட்டவர்களின் அனுமதியின்றி விரும்பவில்லை.//
அர்த்தம் புரியாத காரணத்தால் கேள்வி இங்கே Pass செய்யப்படுகிறது.

//இன்றைக்கு அராஜகம், அதிகாரம் என்றெல்லாம் கையைக் கொட்டும் சுட்டும் பேர்வழிகளெல்லாம், இப்படியாகப் பெயரிலி அநியாயத்துக்கு தமிழ்மணத்திலே இருக்கும் ஒரே காரணத்துக்காக அடிவாங்கியபோது எங்கேயிருந்தார்கள்?//

நண்பரே, ‘வீராங்கனை’யின் பதிவை நீக்கியதை வரவேற்று எழுதிய நான், “அதனை முன்பே செய்திருக்கலாமே.. பெயரிலி என்ற சக்தி வாய்ந்த நபருடன் மோதிய பின்பு, சிறிது கால தாமதத்திற்குப் பிறகு நடவடிக்கை எடுத்திருக்கிறீர்களே என்று கவலை+ஆதங்கம் பட்டிருக்கிறேன்..
இதில் குற்றம்சாட்டும் அர்த்தம் இல்லை. அப்படி எடுத்துக் கொள்ளாதீர்கள். குற்றம் என்றால் நடவடிக்கை எடுக்கத் தகுந்த விஷயம்.
//உங்களையோ மற்ற திராவிடக் கொள்கைகளைக் கொல்லவென்றே அவதாரம் எடுத்தவர்களையோ நான் பெரிதும் கொள்கையடிப்படையிலே மதிப்பதில்லை. அதனால், கவலையில்லை.//
இதனை முன்பேயே படித்துத் தொலைந்திருந்தாலும், சூடு, சொரணையில்லாமல்தான் இந்தப் பதிலை உங்களுக்கு எழுதுகிறேன்.

இதிலிருந்தே நான் எப்பேர்ப்பட்ட முட்டாள் என்பதனை தாங்கள் அறிந்து கொள்ளலாம்.

//தோழர் ஸ்டாலினுக்கும் ராஜாவனஜுக்கும் கொஞ்சமாவது நியாயமிருக்க வேண்டாமா? இத்தனை திட்டித் தட்டித் தள்ளுகின்றவர்கள், எப்போதாவது ஜடாயு போன்றோர், போலி சல்மா விடயத்திலே ஐய்பி கொடுத்தார்கள் என்று சொல்லிக்கொண்டு, பெயரிலியைப் போட்டு இலங்கைத ்தமிழன் என்றதை நேரடியாகவே சுட்டி அடித்துக் கொண்டிரூந்தபோது, அடியை வாங்கு என்று buffer zone-இலேயே விட்டுவிட்டுப் போய் அவன் பின்னாலேயே ஒளிந்து கொண்டதும் நடந்தது.//
இப்படியும் ஒரு கொடுமையா..? வருந்துகிறேன் நண்பரே..

//சரி, அதைத்தான் விடுங்கள். இப்படி எதுக்கெடுத்தாலும், தமிழ்மணம், பூங்கா என்றால், பெயரில்லாமலே பெயரிலிதான் என்று திட்டித ்தள்ளுகின்றவர்கள், எப்போதாவது, தமிழ்மணம், பூங்காவிலே வந்த பெயரிலி செய்த நல்ல விசயத்துக்குப் பெயரிலியைப் பாராட்டியதுண்டா? இல்லையே,//
அப்படி உங்களைத் திட்டியவர்கள் யார் என்று எனக்குத் தெரியாததால் நான் பதில் சொல்ல முடியாது..

எனக்குத் தெரிந்து ‘வீராங்கனை’க்கும் முன்பே, ஒரே ஒருவர்தான் உங்களைத் திட்டிக் கொண்டிருந்தார். திருவாளர் ‘கருப்பு’தான் அவர்.

அவர் ஏன் உங்களைத் திட்டுகிறார் என்பது தமிழ்மணத்தை வெறுமனே வாசிப்பவர்களுக்குக்கூட தெரியும்.

ஸோ.. இதற்கு நீங்கள் வருத்தப்பபடுவதற்கு நான் என்ன பதில் சொல்ல முடியும்..?

தங்களுடைய கை வண்ணத்தில் மலர்ந்ததுதான் தமிழ்மணத்தின் ‘பூங்கா’ என்பது உண்மையானால் நான் பெரிதும் மகிழ்ச்சசியடைகிறேன். வாழ்த்துகிறேன்.

மீண்டும் ஒரு புதிய வடிவோடு வெகு சீக்கிரம் அதைக் கொண்டு வாருங்கள். கூடவே எனது ஒரேயொரு பதிவு, அதில் இடம் பெற்றிருந்தது. அதற்காக ஒரு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

//அதை மட்டும் கவனமாகக் கொண்டுபோய், ஒன்றுமே பேசாமல், வெளிக்கு நாமே எல்லாம் என்று காட்டிக் கொண்டவர்களுக்கு அல்லவா சொரிந்துவிட்டுப ்போனார்கள்! போகிறார்கள்!!//
இதற்கும் என்ன அர்த்தம் என்பது புரியாததால் விட்டுவிடுகிறேன். மன்னித்து விடுங்கள் நண்பரே..

//சரி, அண்ணன் வவ்வால் மாதிரியாக இப்பின்னூட்டத்தை நீங்களும் ஒளித்துவிடுங்கள்.//
இந்தப் பதில் எனக்கு பின்னூட்டமாக வரவேயில்லை நண்பரே.. வந்திருந்தால்தானே ஒளித்து வைப்பதற்கு?
//நிற்க; பெயரிலியின் பதிவிலே தமிழ்மணப் பட்டையை எத்தனை நாட்களாகக் கண்டு கொண்டிருக்கின்றீர்கள்? பெயரிலியின் இடுகைகளைப் பெயரிலி தூக்கித் தமிழ்மணத்திலே இப்போதெல்லாம் போடுவதில்லை. தமிழ்மணத்திலே என்ன நடந்தாலும், பெயரிலிதான் என்று ஆகுவதாலே, பட்டையைக் கழட்டியே வைத்திருக்கிறான். யாரவது, வம்புக்குத் தூக்கிப ்போடும் அநாமதேயம் போட்டால் உண்டு.//

எதற்கு இந்தக் கோபமெல்லாம்..?

இவ்வளவு தூரம் அறிவுக்கூர்மையுடன் பதில் சொல்லும் தகுதியுள்ள நீங்கள், இது போன்ற முட்டாள்தனமான அடக்குமுறைகளுக்கெல்லாம் பயந்து ஓதுங்கிப் போவது நியாயமல்ல..

நீங்கள் தயங்காமல் முன் வந்து உங்களைத் தமிழ்மணத்திலே எங்களுடன் இணைய வேண்டும் என்றே விரும்புகிறேன்.
//தமிழ்மணத்திலேயிரூந்து என் பதிவினை நீக்கும் நோக்கமில்லை; அதே நேரத்திலே, தமிழ்மணத்துக்கு – இப்படியான அறைகுறையான புரிதல் உள்ள உங்களைப் போன்றவர்களின் எதேச்சைத்தனமான கருத்துத் தாக்குதல் – இருக்கும்வரைக்கும் நானாக அனுப்பவும் உத்தேசமில்லை.வாழ்க நீர் எம் man//
‘அரைகுறை’ என்று தாங்கள் எழுதியிருப்பதுகூட என்னை நோக்கி வீசப்படும் வசவு போன்ற இகழ்ச்சிப்படுத்தும் வார்த்தைகள்தான்.. புரிந்து கொள்ளுங்கள்.
இவ்வளவு நேரம் உங்களை யாரோ தாக்கினார்கள்.. திட்டினார்ரகள்.. என்றெல்லாம் புலம்பும் நீங்கள், அடுத்தவருக்கும் இதையே செய்யலாமா..? யோசித்துப் பாருங்கள்..

தமிழ்மணத்தை விட்டு விலகும் முடிவையோ அல்லது இணையாதிருக்கும் முடிவையோ நீங்கள் எடுக்க வேண்டாம். தயவு செய்து வாருங்கள்.. இணையுங்கள்.. அளவளாவுவோம்.. பகிர்வோம்..
நம் முன்னே.. நாம் செல்ல வேண்டிய தூரம் மிக அதிகம்.. நாம் எவ்வளவு தூரம் சென்றாலும் நம் அருமை மொழியை, மக்களை, உடன் பிறந்தாரையும் அழைத்துச் செல்ல வேண்டிய கட்டாயம் உண்டு. இது உலக நியதி.. அந்தக் கடமையை நாம் முழுமையாகச் செய்ய வேண்டும்.
இதற்காகவாவது தாங்கள் தமிழ்மணத்தில் மீண்டும் எழுத வர வேண்டும் என்றழைக்கிறேன்.

முடிக்கும் முன்பாக ஓரிரு வார்த்தைகள்..

மேலே, நீங்கள் எடுத்து பதிவாக போட்ட புகைப்படம்தான் தற்போது எனது மானிட்டரின் டெஸ்க்டாப் படமாகக் காட்சியளிக்கிறது.

அந்தப் பதிவிலேயே நான் ‘அழகு’ என்று ஒரேயொரு வார்த்தையில் ஒரு பின்னூட்டம் போட்டிருந்தேன். உங்களுக்கு ஞாபகமிருக்கும் என்று நினைக்கிறேன்.

நேசங்களும், பாசங்களும் என்றென்றைக்கும் என் உள்ளத்தில் யாருக்காகவும் காத்திருக்கிறது.

புரிந்து கொள்ளுங்கள்..

என் அப்பன் முருகன் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் என்றென்றைக்கும் அருள் பாலிக்க வேண்டிக் கொள்கிறேன்.

வாழ்க வளமுடன்.

35 பதில்கள் to “நண்பர் பெயரிலிக்கு ஒரு பணிவான பதில்”

  1. வால்பையன் Says:

    இம்மாதிரியான பெரிய பதிவுகள் போடும்போது இளைப்பாற ஆங்காங்கே விளம்பர இடைவெளி விடுத்தால் நல்லது.

    இளைப்பு வாங்குது சாமி!!

    வால்பையன்

  2. சந்தோஷ் = Santhosh Says:

    அண்ணே ஒண்ணுமே புரியலையண்ணே.. தயவு செய்து விளக்கவும்.. படிக்கறதுக்குள்ள தாவு தீருதண்ணே.. ஒரு இரண்டு மூணு பதிவா போட்டு இருக்கலாம்.. அல்லது முன்னுறையை தவிர்த்து இருக்கலாம்.. ஸ்ஸ்ஸ்ஸ்யப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப் முடியாலல்ல்ல்ல்ல்ல்

  3. Anonymous Says:

    ஹாஹா

    வால்பையனுக்கு ஒரு ரிப்பீட்டேய்

  4. ச்சின்னப் பையன் Says:

    அல்லது ஒரு ‘இடைவேளை’ விட்டுட்டா வெளியே போய் தம் அடிக்கறவங்கல்லாம் அடிச்சிட்டு வந்துடுவாங்க…:-)

  5. இரண்டாம் சொக்கன்...! Says:

    /ஆங்காங்கே விளம்பர இடைவெளி விடுத்தால் நல்லது./

    இடைவெளியில் தயவு செய்து கிளுகிளுப்பான ப்டங்களை போட்டு எம்போன்ற வாசகர்களை உற்சாகப்படுத்திட வேண்டுகிறேன்…..

    அப்பால பிரிச்சி மேய்றதுன்னா என்னான்னு இன்னிக்குதான் தெரிஞ்சிகிட்டேன்…இனி பெயரிலி ஜென்மத்துக்கும் இந்த மாதிரி உங்களூக்கு எழுதமாட்டார் என்பது உங்கள் அப்பன் முருகன் மீது சத்தியம்…

    ஹி..ஹி…ம்ம்ம்ம்ம்

  6. Anonymous Says:

    சீரியசாக நீங்கள் எழுதும் பதிவுக்கு கண்ணைக் கட்டுது, தலையை சுற்றுகிறது என்பது போல் தான் தமிழச்சி அவர்கள் பெண்களின் உடல்கூறுகள் குறித்த பதிவு எழுதப் போய் அவனவனும் பும்பி பதிவாக போட்டி கும்பிவிட்டனர்.

    ஆமாம் வார்த்தைக்கு வார்த்தை வீராங்களை என்கிறீர்களே! ஏன் வீரன் மட்டும் தான் இருக்க வேண்டுமா? அதே போல் தமிழச்சி வம்பளத்துக் கொண்டிருந்தார் என்பதை போல் உங்களின் நான்காவது பதிவும் சொல்கிறது. இது தவறான வாதம் உண்மை தமிழன் அவர்களே! அவர் தேவையில்லாமல் யாரோடும் பிரச்சனை செய்பவர் அல்லர். அவரை இழித்து பேசியவர்களை தான் எதிர்ப்பார். அதே போல் காயடிக்கபபட்ட காளை என்ற வார்த்தையை அனானிகளுக்கு தானே உபயோகித்தார். என்று உங்களை அப்படி சொன்னார் என்று சுட்டிக்காட்ட முடியுமா? ஏனெனில் தினமும் தமிழச்சியின் வலைபக்கத்தை வாசிக்கும் வாசகன் நான். அதனால் தான் கேட்கிறேன். அதுவுமில்லாமல் அவரிடம் எனக்கு தொடர்பு உண்டு. அவரின் குணநலன் அறிந்தவன் என்கிற முறையில் சொல்கிறேன் நீங்கள் தமிழச்சியை தவறாக கணித்து வைத்திருக்கிர்கள்.

  7. இரண்டாம் சொக்கன்...! Says:

    அனானியின் பின்னூட்டத்தினை நான் வழிமொழிகிறேன்….

    நிச்சயமாய் அவர் அத்தகையவர் இல்லை….மிகவும் பொறுமையாகவே சவால்களை எதிர் கொண்டார் என்றே நினைக்கிறேன். பொறுமையின் எல்லையில் அவர் எதிர்வினையாற்றினாரேயொழிய வம்பாய் யாரையும் அவர் கொச்சைப்படுத்தவோ காயப்படுத்தவோ இல்லை என்பதுதான் உண்மை.

    சமூக அவலங்களை அவர் முகத்துக்கு நேராய் சுட்டிக்காட்டியதை எதிர்கொள்ள முடியாமலோ அல்லது ஜீரணிக்கமுடியாததால் ஒரு குறிப்பிட்ட சாராரின் சூழ்ச்சிக்கு ஒட்டு மொத்த தமிழ்மணமும் பலியானதென்றே கருதுகிறேன்.

    தமிழச்சி தமிழ்மணத்தை விட்டு போனதால் இழப்பு தமிழச்சிக்கு இல்லை…தமிழ்மணத்துக்குத்தான்…..

  8. வரவனையான் Says:

    இதுக்கு பேசாம பெயரிலி அண்ணை பதிவெழுதவே வந்திடலாம்.

    சரவணன் அண்ணே, தாவூ உண்மையாவே தீருது

  9. Anonymous Says:

    அனானியாக வருபவர் யார்? தைரியமாக உங்கள் வாதங்களை முன்வைக்கலாமே? ஏன் முதுகு சொறிதல்?

  10. Anonymous Says:

    பெயரிலியின் சர்வாதிகாரம் அனைவரும் அறிந்தது. பெயரிலியே தமிழச்சியை தாக்கி எழுதியிருந்த பதிவுகளையும் அழித்துவிட்டார். அவரை ஏன்யா திரும்ப கூப்புடுகிறீர்?

  11. Anonymous Says:

    // Anonymous said…
    அனானியாக வருபவர் யார்? தைரியமாக உங்கள் வாதங்களை முன்வைக்கலாமே? ஏன் முதுகு சொறிதல்? //

    இந்திரன் கெட்டதும் பெண்ணாலே, அந்த சந்திரன் கெட்டதும் பெண்ணாலே, இந்த கோவை கெட்டது யாராலே!

  12. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

    //வால்பையன் said…
    இம்மாதிரியான பெரிய பதிவுகள் போடும்போது இளைப்பாற ஆங்காங்கே விளம்பர இடைவெளி விடுத்தால் நல்லது. இளைப்பு வாங்குது சாமி!!
    வால்பையன்//

    ஒரே மூச்சில் ஏன் படிக்கிறீர்கள் வால்பையன் ஸார்..? அதற்குத்தான் கொஞ்சம், கொஞ்சம் இடைவெளி விட்டு வைத்திருக்கிறேனே..?

  13. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

    //சந்தோஷ் = Santhosh said…
    அண்ணே ஒண்ணுமே புரியலையண்ணே.. தயவு செய்து விளக்கவும்.. படிக்கறதுக்குள்ள தாவு தீருதண்ணே.. ஒரு இரண்டு மூணு பதிவா போட்டு இருக்கலாம்.. அல்லது முன்னுறையை தவிர்த்து இருக்கலாம்.. ஸ்ஸ்ஸ்ஸ்யப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப் முடியாலல்ல்ல்ல்ல்ல்//

    ராசா.. இதுவா ஒண்ணும் புரியல..? தமிழ் தெரியுமா? தெரியாதா..? எல்லாருக்கும் ரொம்ப கிண்டலாத்தான் இருக்கு.. என்னைப் பார்த்தா..?

  14. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

    //ச்சின்னப் பையன் said…
    அல்லது ஒரு ‘இடைவேளை’ விட்டுட்டா, வெளியே போய் தம் அடிக்கறவங்கல்லாம் அடிச்சிட்டு வந்துடுவாங்க…:-)//

    அதான் விட்டிருந்தனே.. கேள்விக்கும், பதிலுக்கும் நடுவுல.. பாக்கலையா..?

    அது சரி.. தம் அடிக்கிறதே எனக்குப் பிடிக்காது. அதுனால என் பதிவுல அதுக்கெல்லாம் இண்டர்வெல் கிடையாது.. நம்பர்-1-க்கு மட்டும்தான்..

  15. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

    //இரண்டாம் சொக்கன்…! said…
    /ஆங்காங்கே விளம்பர இடைவெளி விடுத்தால் நல்லது./
    இடைவெளியில் தயவு செய்து கிளுகிளுப்பான ப்டங்களை போட்டு எம்போன்ற வாசகர்களை உற்சாகப்படுத்திட வேண்டுகிறேன்…..//

    உங்களையம் நீக்கணும்னு பதிவு போட வேண்டியதுதான்..

    //அப்பால பிரிச்சி மேய்றதுன்னா என்னான்னு இன்னிக்குதான் தெரிஞ்சிகிட்டேன்…இனி பெயரிலி ஜென்மத்துக்கும் இந்த மாதிரி உங்களூக்கு எழுதமாட்டார் என்பது உங்கள் அப்பன் முருகன் மீது சத்தியம்… ஹி..ஹி…ம்ம்ம்ம்ம்.//

    புரிஞ்சுக்கிட்டா சரி..

  16. Anonymous Says:

    // ‘பிரெஞ்சு வீராங்கனை’யின் //

    பிரான்சு நாட்டில் பிறந்து வளர்ந்திருந்தாலும் தன்னை தமிழச்சியாக அறிமுகப்படுத்திக் கொண்டு வருபவரை பிரான்சு நாட்டின் வீராங்கனை என்று நீங்கள் இழிவு படுத்துவது ஏன்? இவரை மாதிரி 10 தமிழச்சிகள் இருந்தால் போதும்! உங்களின் ஆதிக்கத் திமீரை அடக்க! நீயெல்லாம் ஒரு பெரியாரிஸ்டா தூ!!!!!!!!!

  17. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

    //Anonymous said…
    சீரியசாக நீங்கள் எழுதும் பதிவுக்கு கண்ணைக் கட்டுது, தலையை சுற்றுகிறது என்பது போல்தான் தமிழச்சி அவர்கள் பெண்களின் உடல்கூறுகள் குறித்த பதிவு எழுதப் போய் அவனவனும் பும்பி பதிவாக போட்டி கும்பிவிட்டனர்.//

    என்னையும், தமிழச்சியைம் ஒப்பிட்டுப் பேச வேண்டாம் ஸார்..

    //ஆமாம்.. வார்த்தைக்கு வார்த்தை வீராங்களை என்கிறீர்களே! ஏன் வீரன் மட்டும் தான் இருக்க வேண்டுமா? அதே போல் தமிழச்சி வம்பளத்துக் கொண்டிருந்தார் என்பதை போல் உங்களின் நான்காவது பதிவும் சொல்கிறது. இது தவறான வாதம் உண்மை தமிழன் அவர்களே! அவர் தேவையில்லாமல் யாரோடும் பிரச்சனை செய்பவர் அல்லர். அவரை இழித்து பேசியவர்களைதான் எதிர்ப்பார்.//

    தேவையில்லாமல் விளம்பரத்திற்காக படைக்கப்பட்ட பதிவுகளைப் போல் எழுதி, அதற்கு கவர்ச்சிகரமான தலைப்புகளை வைத்து தேவையில்லாமல் தமிழ்மணத்தில் வெற்று பரபரப்பு ஊட்டியவர் உமது வீராங்கனைதான்.. வந்தவர்களெல்லாம் அதைத்தான் குற்றம் சொன்னார்கள். ஆனால் வந்தவர்களிடம் பகடியாட்டம் ஆடிவிட்டு தமிழ் தெரியாது என்று சொற்சிலம்பாட்டம் ஆடி தன்னைத் தற்காத்துக் கொண்டவர். இழித்துப் பேசியதற்கான சூழலை ஏற்படுத்திவிட்டு அதன் பின் அதை வேண்டும் என்றே தொடர்ந்தவர் அவர்தான்.

    //போல் காயடிக்கபபட்ட காளை என்ற வார்த்தையை அனானிகளுக்குதானே உபயோகித்தார்.//

    அனானிகள் மட்டுமென்ன தமிழ்மணத்தில் இழிவானவர்களா? ஏன் நீரும்தான் அனானியாக வந்து பின்னூட்டம் போட்டுள்ளீர்.. நினைவிருக்கிறதா..? அனானிகள் என்றால் பயன்படுத்தி விடுவாரா..? அப்படியானால் அனானிகளை அவர் என்ன மனிதர்களாக நினைத்தாரா? அல்லது மிருகமாக நினைத்தாரா..? ஏன் நானும் உம்மை ஒரு மனிதர் என்று நினைத்து மரியாதையுடன் பதில் சொல்லிக் கொண்டிருக்கவில்லை.. முதலில் அடுத்தவரை மதிக்கக் கற்றுக் கொள்ளச் சொல்லுங்கள்..

    சொந்தத் தளம் என்றாலும் மற்ற மனிதர்களை மதிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மதிக்கத் தெரியாதவர்களெல்லாம் பகுத்தறிவை முதலில் தாம் படித்துத் தெரிந்து கொள்ளட்டும். எங்களுக்குச் சொல்லித் தரத் தேவையில்லை. எங்களுக்கு போதுமான அறிவு ஏற்கெனவே இருக்கிறது..

    //என்று உங்களை அப்படி சொன்னார் என்று சுட்டிக்காட்ட முடியுமா? ஏனெனில் தினமும் தமிழச்சியின் வலைபக்கத்தை வாசிக்கும் வாசகன் நான். அதனால் தான் கேட்கிறேன். அதுவுமில்லாமல் அவரிடம் எனக்கு தொடர்பு உண்டு. அவரின் குணநலன் அறிந்தவன் என்கிற முறையில் சொல்கிறேன் நீங்கள் தமிழச்சியை தவறாக கணித்து வைத்திருக்கிர்கள்.//

    அவருடைய பதிவுகளிலேயே சென்று தேடிப் பாருங்கள்.. கிடைக்கும். இல்லையெனில்.. அதான் நீங்களே சொல்கிறீர்களே.. தொடர்பு உண்டு என்று.. கேட்டுக் கொள்ளுங்கள்.. சொல்லுவார்..

  18. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

    சொக்கன்ஜி..

    மேலே நீங்கள் ரிப்பீட்டு போட்ட அனானிக்கு சொன்ன பதில்தான் உங்களுக்கும்..

  19. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

    //வரவனையான் said…
    இதுக்கு பேசாம பெயரிலி அண்ணை பதிவெழுதவே வந்திடலாம். சரவணன் அண்ணே, தாவூ உண்மையாவே தீருது.//

    வாங்க.. வாங்க.. மப்பு மாப்ளை.. உங்களுடைய இரண்டாவது(முறையான) பின்னூட்டம் இது என்று நினைக்கிறேன்.

    நன்றிகள்..

    பெயரிலியை நானே பதிவெழுத அழைத்திருக்கிறேன். வருவார் என்று உறுதியாக நம்புகிறேன்..

  20. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

    //Anonymous said…
    அனானியாக வருபவர் யார்? தைரியமாக உங்கள் வாதங்களை முன்வைக்கலாமே? ஏன் முதுகு சொறிதல்?//

    எல்லாருக்கும் சில விஷயங்களில் ஏதேனும் சங்கடம் இருக்குமே.. அதனால் ஒண்ணும் பெரிய அளவுக்கான பிரச்சினை இதில் இல்லை என்பது எனது கருத்து..

  21. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

    //Anonymous said…
    பெயரிலியின் சர்வாதிகாரம் அனைவரும் அறிந்தது. பெயரிலியே தமிழச்சியை தாக்கி எழுதியிருந்த பதிவுகளையும் அழித்துவிட்டார். அவரை ஏன்யா திரும்ப கூப்புடுகிறீர்?//

    பெயரிலி வைத்துதான் தமிழ்மணத்தில் சட்டம் என்பதை நான் நம்பவில்லை. அவரை அழைக்கவும் எனது நிலைமையை விளக்கவும்தான் இந்தப் பதிவு..

  22. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

    ///Anonymous said…
    // Anonymous said…
    அனானியாக வருபவர் யார்? தைரியமாக உங்கள் வாதங்களை முன்வைக்கலாமே? ஏன் முதுகு சொறிதல்? //
    இந்திரன் கெட்டதும் பெண்ணாலே, அந்த சந்திரன் கெட்டதும் பெண்ணாலே, இந்த கோவை கெட்டது யாராலே!///

    யாரைச் சொல்கிறீர்கள் அனானியாரே..?

  23. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

    ///Anonymous said…
    //’பிரெஞ்சு வீராங்கனை’யின்//
    பிரான்சு நாட்டில் பிறந்து வளர்ந்திருந்தாலும் தன்னை தமிழச்சியாக அறிமுகப்படுத்திக் கொண்டு வருபவரை பிரான்சு நாட்டின் வீராங்கனை என்று நீங்கள் இழிவுபடுத்துவது ஏன்?//

    ‘வீராங்கனை’ என்ற வார்த்தை இழிவுபடுத்தும் வார்த்தையா..? நானறிந்த தமிழிலே அப்படியில்லையே.. ஒருவேளை நீங்கள் எந்தத் தமிழோ..?

    //இவரை மாதிரி 10 தமிழச்சிகள் இருந்தால் போதும்! உங்களின் ஆதிக்கத் திமீரை அடக்க!//

    அது சரிதான்.. இவர் ஒருவரையே தாங்க முடியல.. பத்து பேரா.. செத்துப் போயிருவோம் அத்தனை பேரும்..

    //நீயெல்லாம் ஒரு பெரியாரிஸ்டா தூ!!!!!!!!!//

    யார் சொன்னது சாமி நான் பெரியாரிஸ்ட்டுன்னு..? என்ன ‘வலை’க்கு புதுசா..?

    எனது ‘பெரியார்’ என் அப்பன் முருகப் பெருமான் மட்டும்தான்..

  24. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

    ஒரு அனானி எனக்கு உதவி செய்கிறேன் என்ற பாணியில் உபத்திரவமான இரண்டு பின்னூட்டங்களை அனுப்பியுள்ளார்.

    அநாகரீகமானது என்பதால் தவிர்க்கப்படுகிறது..

    ஸாரி மிஸ்டர் மலேசிய அனானி..

  25. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

    மன்னிக்கவும் அனானியாரே..

    நான் மிகக் கவனமாக இருக்க வேண்டியுள்ளது.

    தங்களுடைய பதிவை இன்னும் கொஞ்சம் நாகரீகமாக எழுதியனுப்புங்கள். வெளியிடுகிறேன்..

    வேறு வழியில்லை..

  26. துளசி கோபால் Says:

    புதசெவி

  27. முரளிகண்ணன் Says:

    அரோகரா அரோகரா

  28. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

    //துளசி கோபால் said…
    புதசெவி..//

    டீச்சர் இதென்ன புதுசா இருக்கு..?

    என்ன கெட்டப் பழக்கத்தையெல்லாம் கத்துக்க ஆரம்பிச்சிட்டீங்க.. நீங்க போய் இப்படி எழுதலாமா..?

    அப்புறம் நானும் அங்க வந்து இதே மாதிரி கொட்டுவேனாக்கும்..

  29. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

    //முரளிகண்ணன் said…
    அரோகரா அரோகரா//

    யாருக்கு ஸார்..?

  30. முரளிகண்ணன் Says:

    படிக்கிறவங்களுக்குத்தான்

  31. சந்தோஷ் = Santhosh Says:

    //ராசா.. இதுவா ஒண்ணும் புரியல..? தமிழ் தெரியுமா? தெரியாதா..? எல்லாருக்கும் ரொம்ப கிண்டலாத்தான் இருக்கு.. என்னைப் பார்த்தா..?//
    அண்ணாத்தே, இதுக்கெல்லாம் கோச்சிகலாமா? என்ன அண்ணாத்தே? எல்லாம் ஒரு தமாசு தான்.

  32. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

    //முரளிகண்ணன் said…
    படிக்கிறவங்களுக்குத்தான்..//

    முரளி.. மொட்டை போடுற மாதிரி, அப்படியென்ன மொக்கையாவா எழுதியிருக்கேன்..?

    எப்படியோ முருகனுக்கு என்னைச் சாக்கா வைச்சு அரோகரா போட்டுட்டீங்க.. முருகன் கண்டிப்பா காப்பாத்துவான்..

  33. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

    ///சந்தோஷ் = Santhosh said…
    //ராசா.. இதுவா ஒண்ணும் புரியல..? தமிழ் தெரியுமா? தெரியாதா..? எல்லாருக்கும் ரொம்ப கிண்டலாத்தான் இருக்கு.. என்னைப் பார்த்தா..?//
    அண்ணாத்தே, இதுக்கெல்லாம் கோச்சிகலாமா? என்ன அண்ணாத்தே? எல்லாம் ஒரு தமாசுதான்.///

    பின்ன..? எவ்ளோ கஷ்டப்பட்டு அண்ணை பெயரிலியின் வார்த்தைகளுக்கு அர்த்தம் கண்டுபிடிச்சு பதில் எழுதியிருக்கேன்.. அதைப் பாராட்டறதை விட்டுப்போட்டு.. கிண்டலா பண்ற..?

  34. வரவனையான் Says:

    //வாங்க.. வாங்க.. மப்பு மாப்ளை.. உங்களுடைய இரண்டாவது(முறையான) பின்னூட்டம் இது என்று நினைக்கிறேன்.//

    அண்ணா “உள்குத்து” குத்துறதுல நாங்க டொக்டர் பட்டம் வாங்கினவங்க. எங்ககிட்டவேவா….

    நான் “அந்த” ஆட்டம் ஆடி பல மாசமாக போகுது. 😛

  35. Thamil SamUgam Says:

    உண்மைத் தமிழன்!!!

    நீங்க நல்ல தமிழனா? கெட்ட தமிழனா?

    நீங்க நல்ல தமிழன் என்றால் தயவுசெய்து எங்க நிம்மதியை ஏன் கெடுக்க முயற்சி செய்கின்றாயப்பா?. 2 வாரங்களாக தொல்லை இல்லாம இருக்கின்றோம்.

    போனது போகட்டும்.

    தமிழ்ச்சமூகம்

Thamil SamUgam -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி