Archive for the ‘போலிகள் ஜாக்கிரதை’ Category

சைபர் கிரைம்-செந்தழல் ரவிக்கு எனது பதில்..!

செப்ரெம்பர் 10, 2009

ரவி..

என்னை என்ன கேணையன்னு நினைச்சியா..? கோயம்புத்தூர் மீட்டிங்ல வைச்சு என் பதிவுக்கு வர்ற அனானி கமெண்ட்டை பத்தியும், என்னோட போலி பிளாக் பத்தியும் புலம்பினப்ப.. அண்ணே.. இது லக்கியோட வேலையாத்தான் இருக்கும். அவன் இப்ப மூர்த்தியோட ஆள்.. அவன்கிட்ட ஜாக்கிரதையா இருண்ணேன்னு நீதானடா சொன்ன.

நீ சொன்ன அனானி கமெண்ட் அடையாளமெல்லாம் யுவகிருஷ்ணா கமெண்ட்டோட ஒத்துப் போன பின்னாடிதான், நான் சுத்தமா அவன்கிட்டேயிருந்து ஒதுங்கினேன்.

இந்த அருண்குமாரை பத்தியும் நீதான என்கிட்ட முதல்முதல்லா சொன்ன.. அருண் போன் பண்ணி பேசும்போதெல்லாம் அவன் யுவகிருஷ்ணாவை பத்தி சொன்னதையெல்லாம் உன்கிட்ட திருப்பி சொன்னனே.. நீயும் கேட்டுட்டு ஆமாண்ணே.. ஆமாண்ணேன்னு தலையாட்டுன.

அருண்குமாரோட ஏதோ ஒரு சைட் பாஸ்வேர்டை லக்கி மூர்த்திக்கு பார்வர்டு பண்ணியிருக்கான்.. மூர்த்தி அதை யூஸ் பண்ணி அருண்குமாரோட அம்மா, அப்பா போட்டோவையெல்லாம் போலி டோண்டு பதிவுல எடுத்துப் போட்டு கதையெழுதிட்டான்.. பாவம்ணே அருண்.. அப்படீன்னு வெண்ணை நீதானடா சொன்ன..

அதுக்கப்புறம்தான அருண்கிட்ட ஆதாரத்தை அனுப்புடான்னு கேட்டு வாங்கி உனக்கும் அனுப்பி வைச்சனே.. அப்போ தெரியலையா.. உன் பிரெண்டு நல்லவன்னு..

நீ புகார் கொடுக்க வந்தப்பவே இதுக்கு பாலபாரதியையும், யுவகிருஷ்ணாவையும் கூப்பிட வேண்டாம்.. நாமளே பார்த்துக்கலாம்னு சொன்னதுக்கு சரி.. சரின்னு தலையாட்டிட்டு கடைசில உன் மாப்ளை வரவனையானை பார்த்தவுடனே உல்டா அடிச்சுட்ட.. பாலபாரதி மீடியாவை கூப்பிட உதவுவாருன்னு சொல்லி என் வாயை அடைச்ச.. உன் பிரெண்டு யுவகிருஷ்ணாவை கடைசி நிமிஷத்துல கூப்பிட்டுத் தொலைச்சீங்க. அதுக்கு நானா பொறுப்பு..? செய்றதையெல்லாம செஞ்சுட்டு கடைசி நிமிஷத்துல அவன் நல்லவன் மாதிரி வேஷம் போட்டுட்டு அஸிஸ்டெண்ட் கமிஷனர் ரூமுக்குள்ளேயும் வந்து உக்காந்து சிரிச்சுட்டுப் போயிட்டான்.. கடைசியா நானும் காசியும், டோண்டுவும்தான் முட்டாளாயிட்டோம்..

யுவகிருஷ்ணாதான் முன்னாடியே ஒரு பதிவுல நான் போலியுடன் இருந்தேன். அது ஒரு காலம்.. கனவு மாதிரி மறந்திட்டேன்னு ஓப்பன் டாக்ல எழுதி வைச்சானே. படிச்சு பார்த்துட்டு நான் உனக்கு போன் அடிச்சு சொல்லலை.. இப்ப அவன் ரொம்ப ஜாக்கிரதையா பழைய பதிவு எல்லாத்தையும் அழிச்சிட்டான். நான் எங்கேயிருந்து ஆதாரம் காட்டுறது..?

எனக்கென்ன அவன்கூட வாய்க்கா, வரப்பு சண்டையா..? இல்ல பங்காளி சண்டையா..? நான் எதுக்கு அவன்கூட வீணா சண்டைக்குப் போகணும்..? பொழுதன்னிக்கும் அவனைப் பத்தி பேசுறதுதான் என் வேலைன்னு நினைச்சியா..? என்னை அனானியா திட்டி கமெண்ட்டும், மறைமுகமா திட்டி பதிவும் போட்டதுனாலதான் நான் அவன் மேல கோபமானேன்..

இப்பக்கூட எங்களுக்குள்ள என்னடா சண்டை..? நீதான் சொன்ன.. அண்ணே பாவம்ணே.. இப்பத்தாண்ணே எழுத ஆரம்பிச்சிருக்கான்.. விட்ருங்கண்ணே.. நல்லா வர வேண்டிய பையன்ணேன்.. நல்லா எழுத்தாளரா வருவாண்ணேன்னு நீ சாட்டிங்ல சொன்ன.. அப்பவும் நான் சொன்னது.. அவன் போலி டோண்டு மேட்டரை பத்தி எழுதினா மட்டும்தான் நான் பதிலுக்கு என்கிட்ட இருக்குறதை வைச்சு எழுதுவேன்னு சொன்னேன். அவ்ளோதான..

ஆனா அவன் சாரு மேட்டரை எழுதுவான்னு எனக்கென்ன தெரியும்..? அதுல நான் ஒரு பக்கம் இன்வால்வ் ஆயிருக்கேன்னு அவனுக்கும், உனக்கும் நல்லாத் தெரியும்.. தெரிஞ்சும் அப்படி பட்டும்படாம எழுதிட்டான்னு கோபம் வந்துச்சு. அதான் போஸ்ட் போட்டேன்.. அதுலேயும் எப்பவோ போலியோட தொடர்புன்னு ஒத்துக்கிட்டு எழுதிட்டானே.. அதோட நாம சொல்லித்தான் பல பேருக்குத் தெரிய வேண்டியதில்லை. இங்க நிறைய பேருக்கும் தெரியுமே.. கேஷூவலா எடுத்துக்குவான்னு நினைச்சுத்தான் சாரு பதிவுல அவனுடைய முன்னாள் நண்பர்ன்னுதான் குறிப்பிட்டேன்.. திரும்பி படிச்சுப் பாரு.. முன்னாள் நண்பர்ன்னுதான் சொல்லித் தொலைஞ்சிருக்கேன்.

உன் பிரெண்டு என்னடான்னா அப்படியே உல்டா அடிச்சு எதோ ஒரு வலைப்பதிவொன்றில் அப்படீன்னு என் பேர் போடாம மூஞ்சில அடிக்கிறாப்புல ஒரு விட்ஜெட்டை உருவாக்கி வைச்சுட்டான்.. அதைப் படிக்கிறவன் என்ன நினைப்பான்..? நான்தான் ஏதோ பைத்தியம் மாதிரி விடியற்காலை எந்திரிச்சதுல இருந்து ராத்திரி தூங்குவறைவரைக்கும் பொழப்பில்லாம உன் பிரெண்ட்டை பின்னாடியே விரட்டிருக்கேன்னு நினைச்சுக்க மாட்டானா..? இப்ப நான் என்ன செய்யறது..? அதான் அருண்குமாரை அனத்தி அந்த பதிவை போட வைச்சேன்.. அவனும் பாவம்.. அவன் அப்பாவை ஆஸ்பத்திரில சேர்த்துட்டு நாயா அலைஞ்சிட்டிருந்தவன் எனக்காக இருக்குற வேலைகளுக்கு நடுவுல இதையும் போட்டுத் தொலைஞ்சான்..

இதுக்கு நீ என்ன பதில் போடுற..? என்னடா நினைச்சுக்கிட்டிருக்க நீ..? இந்த மூர்த்தி விஷயத்துல மட்டும் எல்லாம் நீ சொல்ற மாதிரி.. சொன்ன மாதிரிதான நடந்துக்கிட்டேன்.. இந்த விஷயத்தைத் தவிர.. உன் பிரெண்டு விஷயத்துல மட்டும் மாட்டேன்னு நான் சொன்னதுக்குக் காரணம் உனக்கே தெரியும்.. தனிப்பட்ட முறையில உன் பிரெண்டு எத்தனை தடவை அனானி பேர்ல என்னைத் தாக்கி என் பதிவுலேயே கமெண்ட்டு போட்டிருக்கான்னு தெரியும்ல.

இவனை அனானியா வந்து திட்டிட்டு இவனே வலைப்பதிவர் சந்திப்பு வாண்ணே கூப்பிடுறானேன்னுதான் எனக்குக் கோபம்.. சோ பத்தி எழுதின பதிவுல போய் பாரு.. ஒரே நிமிஷத்துல அண்ணேன்னு போட்டுட்டு அடுத்த செகண்ட்டுல அனானியா முட்டாத்தமிழன்.. உட்டாலக்கடி தமிழன். அப்படி இப்படின்னு போட்டு வைச்சான்.. ஒரு செகண்ட்டுல எவனாவது அனானி கமெண்ட்டை அப்ரூவ் பண்ண முடியுமாடா..? இதையும்தான உன்கிட்ட சொல்லி வைச்சேன்.. அவன் அந்த விட்ஜெட்டை போடாம இருந்து தொலைஞ்சிருந்தா நானும் விட்டதுடா சனியன்னு என் வேலையை பார்த்துட்டுப் போயிருப்பேன்.. அவன் போட்டு வைச்சா அதுக்கு நான் எங்க போய் எவன் மயித்தப் புடுங்குறது..?

ஏதோ உன் பிரெண்ட்டு.. பிரெண்ட்டுன்னு சொல்லி கொஞ்சிக் குலாவுறியே.. நேர்ல பார்த்தா செருப்பால அடிப்பேன்னு சொன்னியே.. அந்த கருத்து கந்தசாமியும், மகேந்திரனும் உன் பிரெண்டுகூட இன்னிக்கு சேர்ந்து நின்னு மும்மூர்த்திகளா போஸ் கொடுத்திருக்காங்க.. இதுக்கு என்ன செய்யப் போற..?

விடாது கருப்பு டீம்ல ஆபாசப் பதிவு எழுதின லிஸ்ட்ல மகேந்திரன் பேரும் இருக்கு. அவரையும் சேர்த்துதான் மூர்த்தி கைப்பட எழுதிக் கொடுத்திருக்கான். லைவ் டெலிகாஸ்ட் மாதிரி விசாரணை நடக்கும்போதே உன்கிட்ட போன்ல இதை சொன்னனே.. ஞாபகமிருக்கா..? இப்போ உன் பிரெண்டுதான் அவன்கூட ஜோடியா கோல்கேட் விளம்பரம் போஸ் கொடுத்திருக்கான்.. என்னத்த புடுங்கப் போற..?

ரெண்டு நாளைக்கு முன்னாடி திபிசிதியை கண்டிச்சு ஒரு பதிவு போட்டியே.. என்ன மயித்துக்கு..? அவர் விடாது கருப்புவோட லின்க்கை வைச்சிருக்காருன்னு சொல்லித்தான.. ங்கொய்யால.. இங்க விடாது கருப்பு தளத்துல பதிவு எழுதினவர்கூடத்தாண்டா உன் பிரெண்டு சிரிச்சுக்கிட்டு நிக்குறான்.. இப்ப எங்கடா போய் நாண்டுக்கிட்டு சாவ..? இனிமே திபிசிதியையும், கோவியையும் எந்த மூஞ்சியை வைச்சுக்கிட்டு மூர்த்தியோட தோஸ்த்துக, அல்லக்கைகள்ன்னு சொல்லுவ..?

இந்த எழவுக்காகத்தான் அப்பவே மூர்த்தியோட யார், யார் இருக்காங்கன்னு தெரிஞ்சு அவங்ககிட்டேயிருந்து நான் ஒதுங்கினேன்.. திபிசிதி, கோவி, யுவகிருஷ்ணா, மகேந்திரன்னு இவங்க பதிவு பக்கம் போகாம ஒதுங்கி ஒரு வருஷமாச்சுடா.. என் கமெண்ட்டை இவங்க பதிவுல பாத்திருக்கியா..? ஒரு கொள்கைன்னு இருந்தா ஒரே மாதிரி இருந்திரணும்.. இல்லைன்னா ஆட்டைக்கு வரலைன்னு சொல்லிட்டு கூட்டத்தோட கூட்டமா சேர்ந்து கோவிந்தா போட்டுட்டு போயிரணும்..

டோண்டு இருக்கிறவரைக்கும் போலி டோண்டு இருப்பாண்ணே.. என்னால ஒண்ணும் செய்ய முடியாதுண்ணேன்னு பாலபாரதி சொன்ன பின்னாடிதான் நான் எந்தப் பதிவர் கூட்டத்துக்கும் போகாம ஒதுங்கியிருக்கேன்.. ஒண்ணு பதிவர்கள் மேல ஒரு அக்கறை இருக்கணும். அவனுக்கு ஒண்ணுன்னா உதவணும்.. அதில்லாம அவனை அடிச்சு விரட்டணும்னு நினைச்சு எதிர்க்கிறவனுக்கு மறைமுகமாக ஆதரவையும் கொடுத்துப்புட்டு பதிவர் சந்திப்புக்கு வாங்கன்னா கேக்குறவன்லாம் கேணையனா..? எந்த மூஞ்சியை வைச்சுக்கிட்டு நான் அங்க போய் செவிட்டு எழவுன்னு என்னைக் கூப்பிட்டவன்கிட்டபோய் இளிச்சுக்கிட்டு நிக்குறது..?

போதுண்டா சாமிகளா.. ஆளாளுக்கு தேவைன்னா ஓடி வருவீங்க.. நாங்களும் இருக்குற பொழைப்பையெல்லாம் விட்டுட்டு உங்களுக்காக ஓடி வரணும்.. கடைசியா நீங்கள்லாம் ஒண்ணு சேர்ந்துக்குவீங்க. நாங்க விரலைச் சூப்பிக்கிட்டு நடுரோட்டுல தனியா பைத்தியக்காரன் மாதிரி நிக்கணும்.. எனக்கென்ன தலையெழுத்தா..?

உங்களுக்குள்ள சண்டைன்னா நீங்களே முட்டி, மோதிக்கிட்டு சாவ வேண்டியதுதானடா.. என்னை மாதிரி ஆளுகளை என்ன எழவுக்குடா இழுத்துவிடுறீங்க.. இந்த பிரச்சனை ஆரம்பிச்சதுல இருந்து எனக்குக் கொஞ்ச நஞ்சம் இருந்த நிம்மதியும் போச்சு.. இதுக்காக உழைச்ச நேரத்துக்கு எங்கிட்டாச்சும் போய் பிச்சையாவது எடுத்திருந்தா, எனக்கு இன்னிக்கு சோத்துக்காச்சும் உதவும்.. எவ்ளோ உழைப்பு வேஸ்ட்டு.. ஏண்டா இந்த பிளாக் சனியனைத் தொட்டோம்னு இருக்கு எனக்கு..

இவ்ளோ தூரம் நாய்படாதபாடா அலைஞ்சிருக்கேன்.. கூலா கொரியால உக்காந்துக்கிட்டு அவரும் போலி டோண்டுவால் பாதிக்கப்பட்டவர்ன்னு பீலா வுடுறே.. அப்ப இத்தனை நாளா என்கிட்ட விட்டதென்ன உல்டாவா..?

கடைசியா அதென்ன எவனோ ஒரு எழுத்தாளனின் சதியா..? எந்த கேப்மாரி, சொமாறி அந்த எழுத்தாளன். அவன் யாருன்னாவது சொல்லித் தொலையேன்.. அவன் மூஞ்சியையாவது பார்த்துத் தொலையறேன்.. படிக்கிற அத்தனை பேரும் இப்ப என்ன நினைப்பான்..? ஏதோ உண்மைத்தமிழன் யார் என்ன சொன்னாலும் கேப்பான்.. சுய அறிவே இல்லாதவன்.. கேணப்பய.. எடுப்பார் கைப்பிள்ளைன்னு நினைச்சு இருக்குற மரியாதையும் போயிருச்சு.. ஏண்டா எழுதும்போது முன்ன பின்ன யோசிச்சு எழுத மாட்டியா..? அந்த பிரபல எழுத்தாளன் யாருன்னாவது சொல்லேன்.. நானும் தெரிஞ்சுக்குறேன்..

எனக்குத் தேவைதான்.. ஒழுங்கு மரியாதையா டோண்டு ஒழிக.. பெரியார் வாழ்க.. திராவிடம் வளர்கன்னு அன்னிக்கே உங்களை மாதிரி சொல்லிட்டுப் போயிருந்தா எனக்கு இன்னிக்கு இந்த நிலைமை வந்திருக்காது.. நான்தான் படிக்காத முட்டாளாச்சே. இன்னிக்குத் தெரியுது.. உனக்காகவும், உன் பிரெண்டுக்காகவும் நூத்தியெட்டு தடவை சொல்றேன்னு நினைச்சுக்க டோண்டு ஒழிக.. பெரியார் வாழ்க.. திராவிடம் வளர்க.. போதுமா..?

ஐயா சாமி.. எனக்கு இன்னும் என்னென்னவோ வாய்ல வருது.. முடியலை.. போதும்டா கண்ணு.. நீ நினைக்கிற மாதிரி ரப்பர் மாதிரி வளைஞ்சு கொடுக்குற ஆளும்.. கட்சிக்காரன் மாதிரி கால்ல விழுந்துகிடக்குற ஆளும் நான் இல்ல ராசா..

மெட்ராஸ் வந்தப்ப ஹோட்டலுக்கு கூப்பிட்டு நல்லா சோறு போட்ட.. சைபர் கிரைம் ஆபீஸுக்கு அலையறதுக்கு கொஞ்சம் காசு கொடுத்த.. தம்பி முருகன் சத்தியமா சொல்றேன்.. திரும்பி உன்னை பார்க்குறப்ப மருவாதையா அந்தக் காசை திருப்பிக் கொடுத்துர்றேன். இல்லேன்னா இப்ப உடம்புல இருக்குற ஒத்தை எலும்பும் நிக்காது.. சத்தியமா சொல்றேன்.. திருப்பிக் கொடுத்துர்றேன்..

இந்த மட்டுக்கும்போதும்பா..

நீயும் நல்லா இரு.. உன் பிரெண்ட்டும் நல்லா இருப்பான்.. அவன் நல்ல பெரிய எழுத்தாளனா வரட்டும்.. வாழ்த்துறேன்.. அந்த மூர்த்தியும் குடும்பத்தோட நல்லாயிருக்கட்டும்.. அல்லக்கைகளும் நல்லா வாழட்டும்..

சைபர் கிரைம்ல என் கேஸ் மட்டும்தான நிக்குது.. இனிமே நானே அதை பார்த்துக்குறேன். எவன் தயவும் எனக்குத் தேவையில்லை..

குட்பை..

பதிவு முழுக்க எப்பவும்போல டா போட்டுட்டேன்.. மன்னிச்சுக்க தம்பி.. கோச்சுக்காத.. திருப்பி திருத்த உக்காந்தா என் பொழப்பு கெட்டிரும்.. அதுனால நேர்ல என்னை பார்க்கும்போது உன் செருப்பை கழட்டி என்னை எவ்ளோ அடிக்கணுமோ அவ்ளோ அடிச்சுக்க..

நல்லாயிருப்பா ராசா..