Archive for the ‘நகைச்சுவை’ Category

குழந்தைகளும் வலைப்பதிவர்களும்..!

நவம்பர் 9, 2009

09-11-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இமெயிலில் வந்த இந்தக் குறும்புப் புகைப்படங்களை பார்த்துக் கொண்டேயிருந்தபோது திடீரென்று தோன்றிய ஐடியாவில் ஏதோவொன்றை எழுதியிருக்கிறேன்.. கோபிக்க வேண்டாம்.. என்ஜாய் பண்ணுங்க மக்களே..!

நான்தான் வால் பையன்.. இதுக்கு மேலேயும் ஆதாரம் வேணுமா உங்களுக்கு..?
ஐயையோ.. தெரியாத்தனமா தமிழ்மணம் போட்டிக்கு வந்த பதிவுகளையெல்லாம் படிச்சுத் தொலைஞ்சிட்டேன்..

தூயா ஆண்ட்டி உசிரோட சமைக்கிறது எப்படின்னு போஸ்ட் போட்டிருக்காங்க..

ஷக்கலக்க பேபி.. ஷக்கலக்க பேபி.. கானா பிரபா அங்கிள் எனக்காக போட்ட பாட்டு கேக்குது..

அப்பா ஜ்யோவ்ராம்சுந்தர் பதிவைப் படிக்குறாரு.. அதான் என்னைத் திருப்பிப் போட்டுட்டாரு..

சர்வேசன் மாமா ‘நச் கதை போட்டி’ வைச்சிருக்காரு. ‘ச்சும்மா’ இதே மாதிரி ஊதிருவேனாக்கும்..

பெருசு தண்டோராவோட பதிவையெல்லாம் படிச்சிட்டு கடைசீல இந்தத் தண்ணில குளிச்சாத்தான் சூடு அடங்குது..

குசும்பன் மாமா எழுதாம இருக்காரே.. ரொம்ப வருத்தமா இருக்கு..

ஐயையோ… ஆசீப் அண்ணாச்சி துபாய்லபோய் கட்சி ஆரம்பிச்சிட்டாராம்..

ஹாலிவுட்பாலா சித்தப்பா எழுதறதையெல்லாம் படிக்கப் படிக்க முடி இப்படி நீண்டுக்குது..

ஐயையோ.. வடகரை அண்ணாச்சிக்கிட்ட வம்பு பண்ணி இப்படி மாட்டிக்கிட்டனே..

சஞ்சய் மாமாவுக்கு இப்போதைக்கு கல்யாணம் இல்லையாம்.. சந்தோஷமா இருக்கு..!

ச்சீச்சீ.. சுகுணாதிவாகரும், கமலஹாசனும் எப்பவுமே குட்பிரெண்ட்ஸ்தான்..

போன மாசம் பைத்தியக்காரன் அண்ணாச்சி காட்டுன படத்துல பார்த்த ஸ்டைல்.. நல்லாயிருக்கா..?

எப்படி என் ஆங்கிள்..? எடுத்தது ஜாக்கிசேகர் அங்கிளாக்கும்..

இப்படி சாதுகளையெல்லாம் கழுத்தை நெரிச்சு கொல்றதுதான் வலையுலக ஸ்டைலு..

அண்ணன் வினவு பதிவையெல்லாம் படிக்கணும்னா இப்படியொரு கண்ணாடியை போட்டுக்கோணும்..!

இதுதான் மொக்கை குரூப்போட ஸ்டைலு.. எத்தனை பேர் தலைல மண்ணையள்ளிப் போட்டிருக்காங்க தெரியுமா?

ஹி..ஹி.. நான் மா.சி.யோட குரூப் மெம்பர்.. இது அவருக்கே தெரியாது. அவர்கிட்ட சொல்லிராதீங்க..

கேபிள் சங்கர் தாத்தாவோட நிதர்சனக் கதைகள் எல்லாத்தையும் படிச்சனா..? தலை அரிக்குது.. அதுதான் கட் பண்றேன்..

ஐயையோ நான் ஜட்டியோட இருக்கேன். அப்புறமா நந்து அப்பாவுக்கு போஸ் தரேன்..

‘யூத்’ உண்மைத்தமிழன் சின்ன வயசுல இப்படித்தான் இருந்தாராம்.. அதான் இப்பவும் இப்படி இருக்காரு..


படித்தோர் அனைவருக்கும் குழந்தைகளின் சார்பாக எனது நன்றிகள்..!!!