சட்டி சுட்டதடா..! கை விட்டதடா…!
சட்டி சுட்டதடா..! கை விட்டதடா…!
புத்தி கெட்டதடா..! நெஞ்சைத் தொட்டதடா…!
புத்தி கெட்டதடா..! நெஞ்சைத் தொட்டதடா…!
நாலும் நடந்து முடிந்த பின்னால்
நல்லது கெட்டது தெரிந்ததடா..!
சட்டி சுட்டதடா..! கை விட்டதடா…!
புத்தி கெட்டதடா..! நெஞ்சைத் தொட்டதடா…!
புத்தி கெட்டதடா..! நெஞ்சைத் தொட்டதடா…!
பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா..!
மீதி மனதை மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா..!
பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா..!
மீதி மனதை மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா..!
ஆட்டி வைத்த மிருகம் இன்று அடங்கி விட்டதடா..!
ஆட்டி வைத்த மிருகம் இன்று அடங்கி விட்டதடா..!
அமைதி தெய்வம் முழுமனதில் கோவில் கொண்டதடா..!
சட்டி சுட்டதடா..! கை விட்டதடா…!
புத்தி கெட்டதடா..! நெஞ்சைத் தொட்டதடா…!
புத்தி கெட்டதடா..! நெஞ்சைத் தொட்டதடா…!
ஆரவார பேய்கள் எல்லாம் ஓடி விட்டதடா..!
ஆலயமணி ஓசை நெஞ்சில் கூடி விட்டதடா..!
தர்ம தேவன் கோவிலிலே ஒலி துலங்குதடா..!
தர்ம தேவன் கோவிலிலே ஒலி துலங்குதடா..!
மனம் சாந்தி சாந்தி சாந்தி என்று ஓய்வு கொண்டதடா..!
சட்டி சுட்டதடா..! கை விட்டதடா…!
புத்தி கெட்டதடா..! நெஞ்சைத் தொட்டதடா…!
புத்தி கெட்டதடா..! நெஞ்சைத் தொட்டதடா…!
எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா..!
நான் இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா..!
எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா..!
நான் இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா..!
பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா..!
பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா..!
இறந்த பின்னே வரும் அமைதி வந்து விட்டதடா ..!
சட்டி சுட்டதடா..! கை விட்டதடா…!
புத்தி கெட்டதடா..! நெஞ்சைத் தொட்டதடா…!
புத்தி கெட்டதடா..! நெஞ்சைத் தொட்டதடா…!
திரைப்படம் : ஆலயமணி
இசை : விஸ்வநாதன் – ராமமூர்த்தி
பாடியவர் : TM சௌந்தர்ராஜன்
எழுதியவர் : கவியரசர் கண்ணதாசன்