என் இனிய வலைத்தமிழ் மக்களே..
தமிழ்மணம் நடத்திய போட்டியில் எனது பதிவுகளை வெற்றி பெற வைத்த வலைப்பதிவர்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நன்றிகள்..
எனது எழுத்தினையும் படிக்கக் கூடிய ஒன்றுதான் என்ற ரீதியில் நீங்கள் அங்கீகரித்திருப்பது, நான் சோர்வடையாமல் இருந்து மேலும், மேலும் எழுதுவதற்கு என்னை மிகவும் ஊக்கப்படுத்துகிறது.
அதிலும் ஒரு பொருத்தமாக நமது எழுத்துலக ஆசான் சுஜாதா அவர்களின் அஞ்சலிப் பதிவு வெற்றி பெற்ற செய்தி, அந்த ஆசான் மறைந்த தினத்தன்றே வெளியானது எனக்கு நெகிழ்ச்சியைத் தருகிறது.
முதல் பரிசு, இரண்டாம் பரிசு என்பது ஒரு அளவீடுதானே ஒழிய, அதுவே முத்திரையல்ல.. இந்த அளவீடுகள் பதிவுக்கு பதிவு, தலைப்புக்குத் தலைப்பு மாறுபடும் தன்மை கொண்டது. பதிவர்கள் பலரும் பலவித குடும்பச் சூழல்களுக்கு மத்தியில் எழுத வருவதே மிகப் பெரிய விஷயம். அந்த வகையில் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து பதிவர்களுமே தத்தமது வெளிப்பாடுகளை அவரவர்க்கு ஏற்றவகையில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அத்தனை பேருமே வலையுலகின் எழுத்தாளர்கள்தான்.. சிறந்தவர்கள்தான்.. சந்தேகமில்லை..
நேரமும், சந்தர்ப்பமும் அனைவருக்கும் ஒரேவகையில் வாய்க்குமானால் இன்னும் சிறப்பாக பதிவர்களால் எழுத முடியும்.. அது அவர்களுக்கு கிட்டும் என்று நம்புகிறேன்..
ஆரோக்கியமான முறையிலும், நேர்மையான முறையிலும் போட்டியினை நடத்திய தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்..
தொலைபேசியிலும், நேரிலும், பின்னூட்டத்திலும் வாழ்த்துச் சொன்ன அன்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்..!
வலையுலகம் செழித்து வளரவும், பதிவர்கள் அவர்தம் குடும்பத்தினரும், வாசகர்களும் அவர்தம் குடும்பத்தினரும் நீடூழி வாழ வேண்டி என் அப்பன் முருகப் பெருமானை வேண்டிக் கொள்கிறேன்..
நன்றி
வணக்கம்.